மீரா மிதுனை கைது செய்ய அதிரடி உத்தரவு
Last Updated on March 23, 2022 by Dinesh
மீரா மிதுனை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது மத்திய குற்றப்பிரிவு அமர்வு நீதிமன்றம் இதன் முழு விவரம் பின்வருமாறு..

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் மீரா மிதுன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 8 தோட்டாக்கள் படத்தில் மகா என்ற கதாபாதிராத்தில் நடித்து இருப்பார்..
அதன் பிறகு, 2018-இல் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்து இருப்பார்.
இதையடுத்து 2019-இல் போதை ஏரி புத்தி மாறி மற்றும் 2021-இல் என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட திரையப்டங்களில் நடித்துள்ளார்…
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3-இல்
போட்டியாளராக கலந்து கொண்டு 35 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்தார். பின்னர் போட்டியில் இருந்து எலிமிநட் செய்யபட்டு போட்டியில் இருந்து வெளியேற்றபட்டார்..
இப்போட்டியில் கலந்து கொண்ட பின்னரே நடிகை meera mithun பலராலும் அறியப்பட்டு பிரபலமானார். ஆனால், இவருக்கு சினிமாவில் பெறிதளவு வாய்ப்புகள் ஏதும் கிடைக்க பெறாத நிலையில் தமிழ் சினிமாவின்,
முக்கிய நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துகளையும், சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்தார்..
இது சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் மீரா மிதுன் மீது பல்வேறு தரப்பில் காவல் நிலையத்தில் வழக்குகளும் கொடுக்க்பட்டன..
இந்த வழக்குகளின் அடிப்படையில் காவல் துறையினரால் தேடபட்டு வந்த meera mithun தனது அவதூறு கருத்துகளையும், சர்ச்சை பேச்சுகளையும் தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்..
ஒரு கட்டத்தில் meera mithun- இன் அவதூறு கருத்துக்கள் எல்லை மீறி பட்டியலினத்தவர் குறித்து தனது அவதூறு கருத்துக்களை பேசு அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டார்..
இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இது தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிபடையில் வன்கொடுமை தடை சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார்..
மீரா மிதுனை கைது செய்ய அதிரடி உத்தரவு
இதையடுத்து meera mithun இவ்வழக்கு தொடர்பாக கேரளாவில் தலைமறைவாக பதுங்கி இருந்த மீரா மிதுன் மற்றும்,
அவருடன் தங்கி இருந்த நெருங்கிய நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவரும் கைது செய்யபட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கபட்டனர்..
அதன் பிறகு, இவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யபட்டு தற்போது வெளியில் இருக்கும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக,
இன்று (23.3.2022) விசாரணைக்கு வந்த்போது நடிகை மீரா மிதுன் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறபித்து மத்திய குற்ற பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.