எப்ப வேணாலும் கரு கலையலாம் கதறி அழும் செவ்வந்தி சீரியல் நடிகை

கணவர் அடித்ததால் எனக்கு எப்ப வேணும்னாலும் கரு கலையலாம் என செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..

எப்ப வேணாலும் கரு கலையலாம் கதறி அழும் செவ்வந்தி சீரியல் நடிகை
divya sridhar

சன் டிவியில் ஒளிப்பராகி வந்த பிரபலமான மகராசி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை பெங்களூருவை சேர்ந்த திவ்யா ஸ்ரீதர் கடந்த சில நாட்களுக்கு முன்னர,

தன்னுடன் கேளடி கண்மணி தொடரில் நடித்த அர்னாவ் உடன் திருமணம் நடைபெற்றுவிட்டதாக கூறி அதற்கான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்..

அந்த புகைபடத்தில் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு முஸ்லிம் முறைப்படி வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது..

இதை தொடர்ந்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடிகை திவ்யா ஸ்ரீதர் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது instagram பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்க்கு ரசிகர்கள் பலர் உங்களுக்கு எப்போ திருமணம் ஆச்சு அதை நீங்க சொல்லல இப்போ திடீரென கர்ப்பமாக இருக்கிறேன் என சொல்கிறீர்களே என பலர் கமெண்ட்களில் ஆச்சர்யத்துடன் பதிவிட்டு இருந்தனர்..

இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீதர் தன் கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறி இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு கதறி அழும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது..

வீடியோவில் : நானும் செல்லமா சீரியல் ஹீரோ அர்னாவும் கேளடி கண்மணி சீரியல்ல ஒன்னா தான் நடிச்சோம்

அதிலிருந்து எங்களுக்குள்ள ஃபிரண்ட்ஷிப் ஸ்டார்ட் ஆகி நாங்கள் லிவிங் டூ கெதர்ல வாழ்ந்து வந்தோம்..

..கடைசியாக நாங்க இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வீடு வாங்குனோம் அந்த வீட்டுக்கு முன் பணம் நான் தான் கொடுத்தேன்.

கல்யாண பரிசு சீரியல்ல முடிச்சிட்டு கடந்த இரண்டு வருடமாக அவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த போது நான் தான் வீட்டின் இ‌எம்‌ஐ மற்றும் மற்ற இதர செலவுகளை எல்லாம் பார்த்து வந்தேன்..

Read Also | தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்த ஹரீஷ் கல்யாண | எங்களின் புதிய வாழ்க்கை பயணத்தில் உங்களின் அன்பும், ஆசீர்வாதமும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் – ஹரீஷ் கல்யாண் |

அவனுக்கு எந்த கஷ்டமும் குடுக்காம பாத்துக்கிட்டேன். என் கணவர் அடிச்சதுல நான் நா கீழ விழுந்துட்டேன் வைத்துல அடிபட்டு அப்படியே மயங்கிட்டேன்

கொஞ்ச நேரம் கழிச்சி மயக்கம் தெளிஞ்சதும் எனக்கு வயிறு வலிக்க ஆரமிச்சிடுச்சி அவனுக்கு ஃபோன் பண்ணா நம்பர் பிளாக் பண்ணிட்டான்.

அப்பறம் நானே அரசு மருத்துவமனைக்கு வந்துட்டேன் இங்க டாக்டர் எப்ப வேணும்னாலும்,

உங்களுக்கு கரு கலைய வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க என நடிகை திவ்யா ஸ்ரீதர் கதறி அழும் வீடியோ ..இப்போ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version