இயக்குனர் அட்லீ முதன் முறையாக ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…

தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்களை தளபதி விஜய்யை வைத்து இயக்கிய இயக்குனர் அட்லீ தற்போது முதன் முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து jawan திரைபடத்தை இயக்குகிறார்..
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இப்படத்தில் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு, ப்ரியாமணி, சான்யா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
மேலும், இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார்..
இதை தொடர்ந்து ஜவான் திரைபடத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பத்தற்க்கு நடிகர் ராணா டகுபதியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும்
அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின..
ஆனால், தற்போது ஜவான் படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உறுதி செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த தகவலானது அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கபடவில்லை என்றாலும் இதனை உறுதி செய்யும் விதமாக சில புகைபடங்கள் இணையத்தில் உலா வருகின்றன..
சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் ஜவான் பட குழுவினர்களாக நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லீ, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்..
அப்போது இவர்கள் நாள்வரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைபடத்தினை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ஜவான் படத்தில் வில்லனாக ராணா டகுபதிக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற கருத்தினை பதிவு செய்து வருகிறார்கள்..
ஏற்கனவே, இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருக்கான் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும்
வேலையில் தற்போது இந்த கூட்டணியில் நடிகர் விஜய் சேதுபதி சேர்ந்து இருப்பது ரசிகர்களிடையே இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது..
இதற்க்கு முன் தளபதி விஜய்க்கு மாஸ்டர் படத்திலும் உலக நாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைபடத்திலும் வில்லனாக நடித்து தனது அசுர நடிப்பை வெளிபடுத்தி இருந்த விஜய் சேதுபதி..
தற்போது ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதில் தனது அசாத்திய நடிப்பை விஜய் சேதுபதி வெளிபடுத்துவார் என்பதில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.