Last Updated on October 23, 2021 by Dinesh
திரையரங்கில் 100 சதவித இருக்கைக்கு அனுமதி அளித்து அதன் வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 1ஆம் தேதி முதல் பின்பற்றி இயங்க அனுமதிக்கபட்டுள்ளது..

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தற்போது பெருமளவு குறைந்து மீண்டும் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.
இதை தொடர்ந்து தமிழக அரசு கொரோனா காலகட்டத்தில் பிறப்பிக்கபட்ட முழு ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது.
அந்த வகையில் முதலில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பேருந்துகள், இரயில்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என படிபடியாக தளர்வுகள் கொண்டு வரபட்டன.
கடந்த வாரம் வழிபாட்டு தளங்கள், அனைத்து வகை கடைகளும் இரவு 11 மணி வரை திறக்கலாம் என மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. அதன் படி, தற்போதுய் மீண்டும் சில முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்த தளர்வுகளானது வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போது கொரோனா கட்டுபாட்டு தளர்வுகள் என்ன என்ன என்பதை பற்றி பார்ப்போம்..
திரையரங்கில் 100 சதவித இருக்கைக்கு அனுமதி
தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வருகின்ற காலம் பண்டிகை காலம் என்பதால் பண்டிகையை முன்னிட்டு கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் போன்றவைகள் இரவு 11 மணி வரை செயல்படலாம் என்று இருந்த கட்டுபாடு இன்று முதல் தளர்த்தபடுகிறது.
திரையரங்கில் நவம்பர் 1 ஆம் முதல் 100 சதவித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் கூட்ட அடங்குகளில் அனைத்து வித கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி,
ஏற்கனவே அனுமதிக்கபட்ட மதுகூடங்களுடன் தற்போது தனித்து இயங்கும் மதுகூடங்களுக்கும் அனுமதி வழங்கபட்டுள்ளது.
வரும் நவம்பர் 1 முதல் மாவட்டத்திற்க்கு உள்ளேயும் மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே (கேரளாவை தவிர) ஏசி பொது பேருந்துகளில் 100 சதவித இருக்கைகளுடன் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கபட்டுள்ளது.
தேவையான எண்ணிக்கை அடிபடையில் பணியாளர்கள், கலைஞர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடத்த அனுமதி. இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது.
திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடை தொடரும் என அறிவிப்பு.
மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நவம்பர் முதல் சுழற்சி முறையில் இயங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.