உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ் வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் இன்று உடல் நல குறைவால் காலமானார்..

உத்திரபிரதேச மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் கடந்த சில மாதங்ககளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்..
இதை தொடர்ந்து, அவருக்கு உடல் நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் மேதாந்தா என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது..
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பலனிக்காமல் குருகிராமிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் காலமானார்.
இதனை முலாயம் சிங் யாதவின் மகனும் தற்போது சமாஜ் வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்..
82 வயதான முலாயம் சிங் யாதவ் (1996 – 1998 ) காலகட்டத்தில் தேவ கௌடா இந்தியா பிரதமராக இருந்த பொழுது அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக அன்றைய காலகட்டதில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார்..
மேலும், முலாயம் சிங் யாதவ் லோக் சபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
தற்போது இவரது மறைவிற்க்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட இந்தியாவின் பல கட்சி தலைவர்கள் இவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்..
இதை போன்று, விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு தொல். திருமாவளவனும் முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து திருமாவளன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..
சமாஜ் வாடி கட்சியின் நிறுவன தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவு தலித்துகள், பழங்குடியினர்,
இதர பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் முதலிய விளிம்பு நிலை மக்கள் யாவருக்கும் நேர்ந்த்திட்ட பேரிழப்பாகும்.
அவர் சமூக நீதிக்கான பாதுகாவலர் ஆவார் அவரது இழப்பு ஈடுசெய்ய இயலாததாகும் அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினர்
மற்றும் சமாஜ் வாடி கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் விசிக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என அறிவித்துள்ளார்.