சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று கடந்த 24 மணி நேர நிலவரப்படி சென்னையில் மட்டும் 6,186 – ஆக உயர்வு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றால் தமிழகம் மட்டுமின்றி சென்னையிலும் தொற்றால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..
இதை தொடர்ந்து சென்னையில் வெகு நாட்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதியில் இருந்து கொரோனாவால் பாதிப்படைவரின் எண்ணிக்கை,
அதிகரித்து வந்ததையடுத்து ஜனவரி 4-ஆம் தேதியில் இருந்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 1000 -ஐ தாண்டியது.
இவை, சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் எதிரொலியாக நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யபட்டது..
அதை தொடர்ந்து, இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 12,895 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இது நேற்று 10,978 பேருக்கு தொற்றினால் பாதிக்கபட்ட நிலையில் இன்று கூடுதலாக 1917 பேருக்கு பாதித்து இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் சென்னையை பொறுத்த வரை இன்று ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா
சென்னையில் நேற்றையை நிலவரப்படி (5,098) கொரோனா தொற்றினால் பாதிக்கபட்ட நிலையில் மேலும் இன்று 1,088 பேருக்கு தொற்று பாதித்து 6,186 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1808 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யபட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இவற்றில் சென்னையை பொருத்தமட்டில் கொரோனாவில் இருந்து விடுபட்டு 681 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்..
கடந்த 24 மணி நேர நிலவப்படி தமிழகத்தின் நாகபட்டினம் – 3, புதுக்கோட்டை – 2, தேனி – 2, தென்காசி – 4 ஆகிய மாவட்டங்களில் கொரோவினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையானது ஐந்திற்க்கும் கீழ் காணபடுவது சற்று ஆறுதலை கொடுக்கிறது.