ind vs eng test: இந்தியாவின் அபார வெற்றியால் ஐசிசி டெஸ்ட் தொடரின் பட்டியலில் முன்னேறி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முதல் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முதல் இடத்தை பிடித்தது.
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது.
இதற்கான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 337 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களையும் எடுத்தது. அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்தது.
இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களை அடித்து இறுதியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.
ஆனால், பின்னால் நடைபெற்ற மற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளை இந்தியா தனது அதிரடி ஆட்டத்தால் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வென்று உள்ளது..
ind vs eng test: ஐசிசி டெஸ்ட் பட்டியலில் முன்னேறிய இந்தியா…
இதை தொடர்ந்து நான்காவது டெஸ்ட் தொடரான கடைசி போட்டி 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டாக் அதோகபட்சமாக 55 ரன்களை எடுத்து இருந்தார்.
பின்னர், ஆடிய இந்திய அணி ரிஷப் பந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 365 ரன்களை குவித்தது இந்திய அணி..
இதை தொடர்ந்து இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை இன்று விளையாட தொடங்கியது.
முதல் பத்து ஓவரிலே தொடக்க் ஆட்டகாரர்களான ஜாக் கிராவ்லெய், டோம் சிம்ப்ளே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இவர்களை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 72 பந்துகளை எதிர்கொண்டு 3 ஃபோர்களுடன் 30 ரன்னில் அவுட் ஆனார். மேலும் போப் 31 பந்துகளில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆடிய டன் லாரன்ஸ் 95 பந்துகளில் 6 ஃபோர் உடன் 50 ரன்களை அணிக்கு பெற்று தந்து அவுட் ஆனார். பென் போயாகேஸ் 46 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அணியின் மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்ச ரன்களை டன் லாரன்ஸ் (50) எடுத்து இருந்தார்..
இறுதியில் இங்கிலாந்து 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அபார பந்து வீச்சால் 25 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்திய அணியில் பந்து வீசிய ரவிசந்திரன் அஷ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 5 விக்கெட்களை எடுத்தனர்.
இந்த போட்டியில் அஸ்வினுக்கு தொடர் நாயகனாவும், ரிஷ்ப் பந்த் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யபட்டனர் .
ind vs eng test: இந்த வெற்றியின் மூலம் கோப்பையை வென்றது மட்டுமில்லாமல் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடத்தை பிடித்துள்ளது