Last Updated on July 30, 2021 by Dinesh
முழு ஊரடங்கில் எதற்க்கு அனுமதி? எதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பதனை பற்றி பார்ப்போம்…

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வருகின்றனர்.
டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் போடபட்டிருந்த ஊரடங்கு நாளை காலையுடன் முடிவடையும் நிலையில் அம்மாநில அரசுகள் மேலும் ஒரு வாரத்திற்க்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து இருக்கிறது..
இதை தொடர்ந்து தமிழகத்திலும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என ஏற்கனவே அமல்படுத்தபட்டது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றினால் பாதிப்படைவர் எண்ணிக்கை 25,000ஐ கடந்து வருவதால், தமிழக அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது..
அதன்படி, தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்து கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் முழு ஊரடங்கிற்க்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளது.. இதனிடையே இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 28,897பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அதில், சென்னையில் மட்டும் இன்று 7,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 23,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் தமிழகத்தில் இன்று 230 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் மே 8 மற்றும் 9 தேதில் தமிழகத்தில் 24 மணி நேரமும் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்தது. மேலும் இரவு 9மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளது..
இதனை அடுத்து, தமிழகத்தில் நாளை காலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த முழு ஊரடங்கு சமயத்தில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பதினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவைகள் கீழ்வருமாறு:
முழு ஊரடங்கில் எதற்க்கு அனுமதி? அனுமதியில்லை?
அனுமதிக்கபட்டவை:
அவசர மருத்துவ சேவைகள்
உரிய அவனங்களுடன் விமான நிலையம், இரயில் நிலையம் செல்ல மட்டும் ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன பயணம்.
வழக்கம் போல் அத்தியாவசிய தேவைகளான பால் விநியோகம் மற்றும் செய்தி தாள் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்.
மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், அமரர் ஊர்தி சேவைகள் அனுமதிக்கபடுகின்றன.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகைகடைகள், காய்கறி, மீன், இறைச்சி ஆகிய தனியாக செயல்படும் கடைகளுக்கு மட்டும். இயங்க நண்பகல் 12 மணி வரை அனுமதி அளிக்கபட்டுள்ளது. வணிக வளாகங்களில் செயல்படும் மளிகை கடைகள், பலசருக்கு கடைகள் ஆகியவற்றிற்க்கு அனுமதி இல்லை.
உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமத்திக்கபடுகிறது.இதில் தேநீர் கடை 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
உணவு விநியோகம்,மளிகை,காய்கறி, மீன் மற்றும் இறைச்சி விநியோகம் செய்யும் மின் விநியோக சேவைகளுக்கு அனுமதி
திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை
தன்னார்வலர்கள், நோயாளிகள்,பராமரிப்பாளர்கள், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் ஆகியவர்களுக்கு உரிய ஆவனங்களுடன் அனுமதி
தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் கட்டுமான சேவைகள், தொழிற்சாலைகள் (தடை செய்யபட்ட பகுதிகளை தவிர) அனுமதி
சாலையோரம் பூ மற்றும் காய்கறி விற்பனை பகல் 12 மணி வரை அனுமதி
நீதிதுறை மற்றும் நீதிமன்றங்கள் அனுமதி
வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள் (atm) காப்பீடு சார்ந்த சேவைகள் ஆகியவற்றிற்க்கு 50 சதவீதம் அலுவலர்களுடன் அனுமதி
பத்திரிக்கை மற்றும் ஊடகம், பெட்ரோல், டீசல் பங்குகள், சரக்கு வாகனங்கள் அனுமதி
அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
தொலை தொடர்பு மற்றும அதை சார்ந்த சேவைகள்
தரவு மையங்கள் மற்றும் அத்தியாவசியமான தகவல் தொழில்நுட்ப உள்கட்ட அமைப்பு வசதிகள் என இதற்கெல்லாம் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிருந்து விமானம் மற்றும் இரயில் மூலம் வருபவர்கள் கட்டாயம் ஈ பாஸ் எடுக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.
முழு ஊரடங்கில் எதற்க்கு அனுமதியில்லை?
எதற்கெல்லாம் அனுமதி இல்லை:
3000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்கள் பெரியகடைகள், வணிக வளாகங்களுக்குள் இயங்கும் பலசரக்கு, காய்கறி கடை மற்றும் இதர தனி கடைகளுக்கு அனுமதி இல்லை
கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கும் அனைத்து தனி கடைகள் இயங்க அனிமதி இல்லை
தங்கும் விடுதிகளில் வணிகம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு தங்குபவர் தவிர மற்றவருக்கு அனுமதி இல்லை
உணவகங்கள், மெஸ், தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்ண அனுமதி இல்லை
சமூக,அரசியல், விளையாட்டு, கேளிக்கை,கல்வி, கலாசாரம் சார்ந்த நிகழ்வுக்கு திருவிழாக்களுக்கு (உள் மற்றும் வெளி அரங்குகள்) அனுமதி இல்லை
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள்,அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைகால முகாம்கள்
திரை அரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், மது கடைகள், மது கூடங்கள், கேளிக்கை கூடங்களுக்கு தடை
பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள்,சலூன்கள், அழகு நிலையங்கள் தடை
வெளிநாட்டு விமான போக்குவரத்து, கோவில் திருவிழாக்கள், வழிபாட்டு தளங்கள், பொது வழிபாட்டுக்கு தடை
விளையாட்டு பயிற்சி குழுமங்கள், பொழுதுப்போக்கு பூங்காக்கள் தடை
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாக்கு தடை
ஐடி மற்றும் ஐடிஇஎஸ் நிறுவனங்கள் செயல்பட தடை
கடற்கரை பகுதி, திருமணம், நெருங்கிய சொந்ததின் இறப்பு, நேர்முக தேர்வு, மருத்துவ அவசரம் (சரியான ஆவணங்கள் அவசியம்) தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை
மேலும் தடை செய்யபட்ட பகுதிகளில் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் தடை என தமிழ அரசு தெரிவித்துள்ளது.