Last Updated on May 12, 2022 by Dinesh
ஆம்பூர் பிரியாணி திருவிழா திடீர் ரத்து செய்து திருபத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை பிரபித்துள்ளார்..

திருபத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வரும் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் அரசு நிர்வாகம் சார்பில் இலவச பிரியாணி திருவிழா நடைபெற இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடபட்டன..
ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடைபெறவிருந்த இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட அரங்குகளில் 20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இடம்பெற உள்ளன எனவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டிருந்தது..
இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகளில் மாட்டிறைச்சி பிரியாணி வகை இடம் பெறவில்லை என கூறி தலித் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து குற்றசாட்டு எழுந்தது..
இதை தொடர்ந்து பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தபடும் என தலித் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்புகளை வெளியிட்டன.
மேலும் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமத்திக்காவிட்டால் இலவசமாக நாங்களே மாட்டிறைச்சி பிரியாணியை வழங்குவோம் தலித் இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தன.
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் திரு. வன்னியரசு தமிழ்நாடு முதலைமைச்சருக்கு விடுத்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது.
ஆம்பூர் பிரியாணி திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது..
அதற்கான ஆலோசனை கூட்டத்தில் மாட்டிறைச்சி பிரியாணி இல்லை என முடிவெடுத்து இருப்பது சனநாயகத்துக்கு விரோதமாகும்.
ஆம்பூரை சுற்றி தினமும் 1லட்சத்திற்கும் மேல் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பி உண்ணுகிறார்கள், பெரும் வணிகம் மாட்டுக்கறி தான், அப்படி இருக்கையில் அரசு சார்பாக நடக்கும் பிரியாணி திருவிழாவில் மீண்டும்,
மாட்டுக்கறி பிரியாணியை இணைக்க வழிகாட்ட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்..
இந்நிலையில் ஆம்பூரில் நாளை தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கபட்டுள்ளது. அடுத்து வரும் 2 நாட்களுக்கு கிருஷ்ணகிரி, திருபத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை காரணமாக பிரியாணி திருவிழா ஒத்திவைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.